நட்பு அது மாற்றமின்றித் தொடருமே..

பாடல்:
தேவதை வம்சம் நீயோ..?

படம்:
சிநேகிதியே!

இசை:
வித்யாசாகர்

பாடியவர்:
சித்ரா, சுஜாதா

எழுதியவர்:
பா விஜய்

முழுவரிகள்:
[தையாரார தாரா, தை..யாரார தாரா,
தையாரார தாரா, தை..யாரார தாரா,
தையயாரார தாரா, தை..யாரார தாரா,
தையாரார தாரா, தை..யாரார தாரா,]

தேவதை வம்சம் நீயோ..?
தேன்நிலா அம்சம் நீயோ..?
பூமிக்கு ஊர்வலம் வந்த, வானவில் நீயோ..!
பூக்களின் வாசம் நீயோ..?
பூங்குயில் பாஷை நீயோ..?
சூரியன் போனதும் அங்கே, வருவதும் நீயோ..!
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )

நட்சத்திரப் புள்ளி, வானமெங்கும் வைத்து,
நிலவுன்னை கோலம்போட அழைத்திடும்..(தையாரார தாரா,)
நீயிருக்குத் இடம், வேடந்தாங்கல் என்று,
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்..

பெண்பூவே நீயும் ஆட,
முகில்கள் ஊஞ்சல் போடும்..
உலாவும் தென்றல் வந்து,
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்..

பகலினில் முழுவதும் வெயிலினிலே,
உனைச்சுட்டு வருத்திய வானம் அது..
இரவினில் முழுவதும் அதையெண்ணியே,
பனித்துளி சிந்தியே அழுகிறது..
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )
(தேவதை வம்சம்..)

வானின் திசைமாறும், பாதைகளும் மாறும்,
நட்பு அது மாற்றமின்றித் தொடருமே.. (தையாரார தாரா,)
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்,
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே..

உன்பாதம் போகும் பாதை,
மண்ணுக்கு சந்தோஷங்கள்..
உன்னோடு ஓர் - ஓர் நிமிஷம்,
உயிருக்கு ஆனந்தங்கள்..

பூக்கள் எல்லாம் உன்னைத்தொட தவமிருக்கும்,
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்..
வானவில்லும் வந்துனக்கு குடைபிடிக்கும்,
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்..
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )
(தேவதை வம்சம்..)
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )

No comments: