வானம் இரவுக்குப் பாலமிடும்..,

பாடல்:
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

படம்:
நிழல்கள்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வைரமுத்து (முதல் பாடல்!)

முழுவரிகள்:
ஹே ஹோ ஹ்ம்.. லல லா..

பொன்மாலைப் பொழுது,

இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!

ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)
வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..
பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)
ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)

அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

No comments: