கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?

பாடல்:
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!

படம்:
டிஷ்யூம்

இசை:
விஜய் ஆண்டனி

பாடியவர்:
ஜெயதேவ், ராஜலக்ஷ்மி

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)
[நா முத்துக்குமாரா இருக்கலாம்..]

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

ஹேய்...
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்! - பெண்ணே,
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்!

கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய்! - முதுகில்,
கட்டெறும்புப் போலே ஊர்கிறாய்!

காதல் தானே! இது காதல் தானே!

உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை?
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்!
இன்னும் பூமுகம் மறக்கவில்லை.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்...
விண்ணைத் துடைக்கின்ற முகிலை,
வெள்ளி நிலவை, மஞ்சள் நட்சத்திரத்தை,
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து,
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்!

இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்து முடித்தேன்;
உள்ளம் காதலிக்கும் உனக்குமட்டும், இன்னும்
சொல்லவில்லையே, இல்லையே!

லட்சம் பல லட்சம் என்று, தாய் மொழியில் சொல்லிருக்க,
ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி, பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியால் களைப்பாளே அதுபோலே...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்,
சாய் சாய் பாய் பாய், சிப்பிலிப்பு சாய் பாய்..
காய் வாய் பாய் சாய், லுப்பாய் சாய் பே க்கு..
துப்பு சுப்பாய், துப்பலாய், சி ல பாய் துலுப்பு,
சக்குத் தக்காய், சலோ, வெக்கேன்டா..

சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்,
சீனிச் சிரிப்பும், என்னைச் சீரழிக்குதே;
விறுவிறுவென வளரும் பழம்,
எந்தன் விரதங்களை வெல்லுதே!

உன்னைக் கரம்பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிட சொல்லுதே;
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து,
என்னைக் குத்திக் குத்தியே கொல்லுதே!

காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

(காதல் தானே!..) (நெஞ்சாங்கூட்டில்..) (நெஞ்சாங்கூட்டில்..)

நிலா தமிழறிந்தால்,

பாடல்:
மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?

படம்:
லவ் பேர்ட்ஸ்

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
ஹரிஹரன், சித்ரா

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)


மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..


மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?


நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..


மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!

பாடல்:
வெயிலோடு விளையாடி

படம்:
வெயில்

இசை:
ஜீ வீ பிரகாஷ் குமார்

பாடியவர்:
திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

எழுதியவர்:
நா முத்துக்குமார்

முழுவரிகள்:
இய்யாஹி யாஹி யாஹி யாஹி,
யதாஹி யாஹி யாஹி யாஹி
யதாஹி யதாஹி யாஹி, ஹே..

தையாரி.. தையாரி.. ஹே..
யாஹி யாஹி யாஹி யாரோ,
தாராரோ.. ஹே, தாரா ரா ரா ரோ..

வெயிலோடு விளையாடி,
வெயிலோடு உறவாடி,
வெயிலோடு மல்லுக்கட்டி,
ஆட்டம் போட்டோமே!

நண்டூரு நரி ஊரு,
கருவேலங் காட்டோரம்,
தட்டானைச் சுத்திச் சுத்தி,
வட்டம் போட்டோமே!

பசி வந்தா குருவி முட்டை;
தண்ணிக்கு தேவன் குட்டை;
பறிப்போமே சோளத்தட்டை;
புழுதி தான் நம்மச் சட்டை!
(புழுதி தான்..)அஆ... (வெயிலோடு..)

ஏ... ஓ...
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்..
வத்திக்குச்சி அடுக்கிக் கணக்குப் பாடம் படிச்சோம்!
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்..
தண்டவாளம் மேல காசை வச்சுத் தொலச்சோம்!

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி, அப்பாவோட வேட்டியிலே,
கண்ணாடி லென்சை வச்சு, சினிமா காமிச்சோம்!
அண்ணாச்சிக் கடையில தான், எண்ணெயில தீக்குளிச்ச,
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,
ஓட்டம் போட்டுத் திரிஞ்சோம்!
வெயிலத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்?? (வெயிலோடு..)

ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே! ஹேஹே!
ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே ஹேஹே ஹேஹேஹே.. (2 முறை)

ஏலேலேலே லேலேலே.. (3 முறை)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்..
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்!
காந்தத்தை மண்ணுல தேய்ச்சுப் பேயை ஆட்டுனோம்..
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்!

ஊமத்தம்பூவை மாத்தி கல்யாணம்தான் கட்டிக்குவோம்;
கழுதைமேல ஊர்வலமா ஊரைச் சுத்துனோம்!
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழைப் பெய்யும்;
அப்ப நாங்க மின்னலுல போட்டோப் புடிச்சோம்!

தொப்புள்கொடியைப் போலத்தான்,
இந்த ஊரை உணர்ந்தோம்..
வெயிலைத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்!! (வெயிலோடு..)
(நண்டூரு..) (பசி வந்தா..)
(வெயிலோடு..) (வெயிலோடு..)

உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,

பாடல்:
நான் ஒரு முட்டாளுங்க..

படம்:
அலைபாயுதே

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன்

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பிலும் குழு வரிகள் சாய்விலும்)

துன்பம் தொலைந்தது; இன்பம் தொலைந்ததையோ..! (துன்பம்..)

செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்! (செப்டம்பர்..)
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!


துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஒஓ..?
காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஒஓ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஒஓ..?
கல்யாணம் முடிந்ததே அப்போ..ஒ ஓஒஓ..!


செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்!
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!

துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?

காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஓஒ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?
கல்யாணம் முடிந்ததே அப்போ.. ஓஓஓ..!

ஒ ஓஓ ஓஓ ஓஒ.. ஒ ஓஓ ஓஓ ஓஒ..

ஏ... பெண்ணே!
காதல் என்பது இனிக்கும் விருந்து;
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து;
ஏன்... கண்ணே?

ஓ.. நிறையை மட்டுமே காதல் பார்க்கும்;
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும்;
ஏன்... பெண்ணா?
காதல் பார்ப்பது பாதிக் கண்ணில்;
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி, பெண்ணே..

கிளிமூக்கின் நுனிமூக்கில், கோபங்கள் அழகென்று,
ரசிக்கும் ரசிக்கும் காதல்..
கல்யாணம் ஆனாலே, துரும்பெல்லாம் தூணாக;
ஏன், ஏன், ஏன், மோதல்..?

பெண்கள்.. இல்லாமல்,
ஆண்களுக்காறுதல் கிடைக்காது..!
பெண்களே உலகில் இல்லையென்றால்..
ஆறுதலே தேவை இருக்காது!

செப்டம்பர் மாதம், செப்டம்பர் மாதம்,
அஹ ஹ அஹா, அஹ ஹ அஹா, அஹ ஹ அஹஹோ..
அக்டோபர் மாதம், அக்டோபர் மாதம்,
.........உஓ..ஒ,ஓஓஒ..
.........ஒஓ..ஒ,ஓஓஒ..
.........உஓ..ஒ,ஓஓஒ..
.........ஒஓ..ஒ,ஓஓஒ..
..........................ஓஒஓ..ஒஓ ஓஒ..
..........................ஓஒஓ..ஒஓ ஓஒ..


நான்.. கண்டேன்!
காதல் என்பது கழுத்துச் சங்கிலி;
கல்யாணம் என்பது காலில் சங்கிலி;
என்... செய்வேன்?
ஹா!

கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு;
தொண்ணூறு வரைக்கும் டூயட் பாடு;
வா.. அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு;
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே. நண்பா..

பிரிவொன்று நேராத, உறவொன்றில் சுகமில்லை,
காதல் காதல் அதுதான்..
உறவோடு சிலகாலம், பிரிவோடு சிலகாலம்,
நாம் வாழ்வோம், வா! வா!

ஆண்கள்.. இல்லாமல்,
பெண்களுக்காறுதல் கிடைக்காது..!
ஆண்களே உலகில் இல்லையென்றால்..
ஆறுதலே தேவை இருக்காது!


செப்டம்பர் மாதம் - செப்டம்பர் மாதம் -
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்!
அக்டோபர் மாதம் - அக்டோபர் மாதம் -
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்!


துன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?
காதல் பிறந்ததே அப்போ..ஒ ஓஓஒ..!
இன்பம் தொலைந்தது எப்போ..ஒ ஓஓஒ..?

கல்யாணம் முடிந்ததே அப்போ.. ஓஓஓ..!

கண்களில் நீலம் விளைத்தவளோ

பாடல்:
செந்தமிழ் தேன்மொழியாள்

படம்:
மாலையிட்ட மங்கை

இசை:
விஸ்வநாதன் - இராமமூர்த்தி

பாடியவர்:
டி ஆர் மகாலிங்கம்

எழுதியவர்:
கண்ணதாசன்

முழுவரிகள்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே..
நில்லென்று கூறி, நிறுத்திவழி போனாளே..!
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்!
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ.. நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே..
அஅஆஅஅஆ அஅஆஅஆ அஅஆ ஆஆஅ ஆஅஅஆஅஅ அ..

செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியா..அ அஅ ஆள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்;
பருகிடத் தலைகுனிவாள்.

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ.. ஓ..
அஅஆஅ ஆஅஅ ஆஅஅ ஆஅஅஆ ஆஆ அஆஆ அஆஆஆ

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ..
சேற்றினில் மலர்ந்தச் செந்தாமரையோ?
செவ்வந்திப் பூச்சரமோ - அவள் (செந்தமிழ்..)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள் (செந்தமிழ்..)

தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..

பாடல்:
உன் சமையலறையில்,

படம்:
தில்

இசை:
வித்யாசாகர்

பாடியவர்:
உன்னி கிருஷ்ணன், சுஜாதா

எழுதியவர்:
கபிலன்

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில், நான் கண்களா? புத்தகமா? (உன் சமையலறையில்..)

நீ விரல்கள் என்றால், நான் நகமா? மோதிரமா? ஆ..அஅஅ, நீ இதழ்களென்றால், நான் முத்தமா? புன்னகையா? ஆ,ஆ..
நீ அழகு என்றால், நான் கவியா? ஓவியனா? (உன் சமையலறையில்..)

நான் வெட்கமென்றால், நீ சிவப்பா? கன்னங்களா? ஆ..அஅஅ,
நான் தீண்டல் என்றால், நீ விரலா? ஸ்பரிஸங்களா? ஆ,ஆஅ..
நீ குழந்தை என்றால், நான் தொட்டிலா? தாலாட்டா? ஆ,ஆ..
நீ தூக்கமென்றால், நான் மடியா? தலையணையா? ஆ,அஅஆ,
நான் இதயமென்றால், நீ உயிரா? துடிதுடிப்பா? ஆ,ஆ.. (உன் சமையலறையில்..)

நீ விதைகள் என்றால், நான் வேரா? விளைநிலமா? ஆ,அஅஆ,
நீ விருந்து என்றால், நான் பசியா? ருசியா? ஆ,ஆ..
நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா? ஆ,ஆ..
நீ மொழிகளென்றால், நான் தமிழா? ஓசைகளா? ஆ,அஅஆ,
நீ புதுமையென்றால், நான் பாரதியா? பாரதிதாசனா? நீ

நீ தனிமை என்றால், நான் துணையா? தூரத்திலா?
நீ துணைதானென்றால், நான் பேசவா? யோசிக்கவா?
நீ திரும்பிநின்றால், நான் நிற்கவா? போய்விடவா? ஆ,ஆ..
நீ போகிறாயென்றால், நான் அழைக்கவா? அழுதிடவா? ஆ,ஆ..
நீ காதலென்றால், நான் சரியா? தவறா?

உன் வலதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.
என் இடதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.

தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..

பொன்னில் வடித்த சிலையே!

பாடல்:
மணியே மணிக்குயிலே,

படம்:
நாடோடித் தென்றல்

இசை:
இளையராஜா

பாடியவர்:
இளையராஜா, மனோ, எஸ் ஜானகி

எழுதியவர்:
இளையராஜா

முழுவரிகள்:
இளையராஜா:
மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் மணியழகே!

ஆண்:
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
ஆண்;
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!
ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..யெஎ எஎஏ!
பெண்:
என்ன இனிக்கும் நிலையே!
இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..யெஎ எஎஏ!

ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு,
காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!
பெண்:
பெண்ணிவளை ஆதரித்து,
பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
ஆண்:
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
பெண்:
தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
ஆண்:
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஆ.... அஅ ஆஅஅ அஆஅ அஆஆ..
ஆஆ, அஆஆஅ ஆ..
ஆஆஅ ஆஆஅ, ஆஆஅ ஆஆஅ, ஆ..

கண்ணிமைகளை வருத்தி,
கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..இஇ இஇஈ!
ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி,
கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..இஇ இஇஈ!

பெண்:
கோடிமணி ஓசைநெஞ்சில்,
கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்..
ஆண்:
சூடமலர் மாலை கொண்டு,
தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்..

பெண்:
அந்தி வரும் நேரமம்மா,
ஆசைவிளக்கேற்றுதம்மா,
ஆண்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
ஆண்:
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,
ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?

என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!

பாடல்:
ஒரு பெண்புறா..

படம்:
அண்ணாமலை

இசை:
தேவா

பாடியவர்:
யேசுதாஸ்

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
ஒரு பெண்புறா,,
கண்ணீரில் தள்ளாட, என்னுள்ளம் திண்டாட,
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கியே,, சுமையானதே..
எந்தன் நிம்மதி,,, போனதே...,
மனம் வாடுதே.. ஒரு பெண்புறா..!

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்,
தூக்கம் கண்ணைச் சொக்குமே,, அது அந்தக்காலமே!
மெத்தைவிரித்தும், சுத்தப் பன்னீர்த் தெளித்தும்,
கண்ணில் தூக்கம் இல்லையே,, அது இந்தக்காலமே!
என் தேவனே,, ஓ, தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த,, வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்,
பாதங்களை ஆற விடு, (ஒரு பெண் புறா..)

கோழி மிதித்து, ஒருகுஞ்சு சாகுமா,
அன்று பாடம் படித்தேன், அது பழைய பழமொழி!
குஞ்சு மிதித்து, இந்தகோழி நொந்ததே,
இதை நெஞ்சில் நிறுத்து, இது புதிய பழமொழி!
ஆண்பிள்ளையோ,, சாகும்வரை..!
பெண்பிள்ளையோ,, போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை,
அழுதுவிட்டேன் ஆனவரை, (ஒரு பெண் புறா..)

நினைவில் உள்ள காட்சி காயுமா?

பாடல்:
பறபற பறபற பற பட்டாம்பூச்சி,

படம்:
கற்றது தமிழ்

இசை:
யுவன்சங்கர்ராஜா

பாடியவர்:
ராகுல்

எழுதியவர்:
நா.முத்துக்குமார்

முழுவரிகள்:
பறபற பறபற பற பட்டாம்பூச்சி,
தொடதொட தொடதொட பலவண்ணம் ஆச்சு;
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி,
இதயத்தின் வானிலை அது மாறிப்போச்சு;

கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு, மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு, இலை படகு ஆனதே.. (பறபற..)
ஆ ஆ ஆ ஆ ஆஅ.. ஆ ஆ ஆ ஆ ஆஅ..

இன்பம் ஒருபுறம் என்று, துன்பம் மறுபுறம் என்று,
சுற்றிச் சுழலுது இந்த மண்மேலே..
தன்னந்தனியாளென்று, யாருமில்லை என்று,
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே..

ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி,
எரிதணலில் மழையின் குளிர்ச்சி;
கடல் அலைகள் மோதி மோதி,
மனம் சிற்பமாகுதே..
எதிரிலே...
அந்த மழலைக்காலம் மீண்டும் திரும்புதே..
ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஒ ஒஒஒஓ.. (பறபற..)

வாழ்க்கை என்பது என்ன, பள்ளிப்பாடமும் அல்ல..
கற்றுக்கொண்டதை மெல்ல முன்னேற..
காதல் என்பது என்ன, புள்ளிக்கோலமும் அல்ல,
காற்றில் கலையும்போது தள்ளாட..
எங்கோ எங்கோ ஓர் உலகம்,
உனக்காகக் காத்துக் கிடக்கும்;
நிகழ்காலம் நதியைப் போல,
மெல்ல நகர்ந்துப் போகுதே..
நதி காயலாம்..
நினைவில் உள்ள காட்சி காயுமா?
ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஓ.. ஒ ஒ ஒஒஒ ஒஒஒஓ..

பறபற பறபற பற பட்டாம்பூச்சி
தொடதொட தொடதொட பலவண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாமூச்சி
இதயத்தின் வானிலை அது மாறிப்போச்சு

கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக் கிடக்குதே..
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே.. (பறபற..)

கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,

பாடல்:
நான் ஒரு முட்டாளுங்க..

படம்:
சகோதரி

இசை:
சுதர்சனம் ஆர்

பாடியவர்:
சந்திரபாபு ஜே பி

எழுதியவர்:
கவியரசு கண்ணதாசன்

முழுவரிகள்:
நான் ஒரு முட்டாளுங்க..
நான் ஒரு முட்டாளுங்க..

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

ஏற்கனவே சொன்னவங்க, ஏமாளி ஆனாங்க,
எல்லாந் தெரிஞ்சிருந்தும், புத்தி சொல்ல வந்தேங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய, 'கயிதே'னு சொன்னாங்க,
எஏஎஅ, அஅஅ அஅஅ அ, ஏ.. ஏ.. ஏ.. கயிதே, டாய்!

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய, 'கயிதே'னு சொன்னாங்க,
முன்னால நின்னாக்கா, மூஞ்சிமேல அடிச்சாங்க..
பேசாதே இன்னாங்க, பொரட்டி - பொரட்டி எடுத்தாங்க,
பீஸ் பீஸா, கீச்சாங்க, பேஜாரா பூட்டுதுங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது..
மேல்நாட்டு பாணியிலே, வேலையெல்லாம் நடக்குது,
ஏன்-னு கேட்டாக்கா, எட்டி எட்டி ஒதைக்குது,
நான் ஒரு முட்டாளுங்க..

நாணமுன்னு, வெக்கமுன்னு, நாலுவகை சொன்னாங்க,
நாலும்கெட்ட கூட்டமொன்னு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க..
ஆனவரை சொன்னேங்க, அடிக்கத்தானே வந்தாங்க,
அத்தனையும் சொன்ன என்னை, இளிச்சவாயன் இன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

நான் ஒரு முட்டாளுங்க..
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க.. முட்டாளுங்க.. முட்டாளுங்க..

அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!

பாடல்:
சின்னச் சின்ன, தூரல் என்ன?

படம்:
செந்தமிழ் பாட்டு

இசை:
இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன்

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம்

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)
[வாலியா இருக்கலாம்..]

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

சின்னச் சின்ன, தூரல் என்ன?
என்னைக் கொஞ்சும், சாரல் என்ன?
சிந்தச் சிந்த, ஆவல் பின்ன,,
நெஞ்சில் பொங்கும், பாடல் என்ன..(சின்னச் சின்ன, ..)
சின்னச் சின்ன..

உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா..
அது தீண்டும் 'மேகம்' இல்ல, 'தேகம்' சிலிர்க்குதம்மா!

உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..!
நனைந்த பொழுதினில், குளிர்ந்த மனதினில், ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..!
மனித ஜாதியின், பசியும் தாகமும், உன்னால் என்றும் தீருமம்மா..!

வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னை சொல்வதுண்டு!
இனமும் குலமும் இருக்கும் உலகில்,
அனைவரும் இங்கு சரிசமமென, உணர்த்திடும் மழையே,!
சின்னச் சின்ன.. (சின்னச் சின்ன, ..)
சின்னச் சின்ன, தூரல் என்ன?

பிழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..
படிச்சவன் பாட்டக் கெடுத்தான் கதையா இல்ல இருக்கு,
பிழைக்கு-னு எழுதலயே, மழைக்கு-னு தான எழுதியிருக்கேன்!

ஓஹோ, ஹொஹொ,
மழைக்கு யாவரும், தவிக்கும் நாட்களில், நீயோ இங்கே வருவதில்லை..!
வெடித்த பூமியும், வானம் பார்க்கையில், நீயோ கண்ணில் தெரிவதில்லை..!
உனது சேதியை, பொழியும் தேதியை, முன்னால் இங்கே யாரரிவார்..?

நஞ்சை மண்ணும், புஞ்சை மண்ணும், நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்!
உனது பெருமை உலகம் அறியும்,
இடியெனும் இசை முழங்கிட வரும், மழையெனும் மகளே,!
சின்னச் சின்ன.. (சின்னச் சின்ன, .. 2 முறை)
சின்னச் சின்ன..

கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..

பாடல்:
கண்டநாள் முதலாய்

படம்:
கண்டநாள் முதல்

இசை:
யுவன்சங்கர்ராஜா

பாடியவர்:
சுபிக்ஷா, பூஜா

எழுதியவர்:
சிதம்பரம் என் எஸ்

முழுவரிகள்:
கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. (3 முறை)
கையினில் வேல்பிடித்த, கருணை சிவ பாலனை,
கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. (கையினில்..)
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

வண்டிசைப் பாடும் எழில், வசந்தப் பூங்காவில்.. (4 முறை)
வந்து சுகம்தந்த, கந்தனே, என் காந்தனே..
(வண்டிசைப்..)(வந்து சுகம்தந்த,..)
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

நீலமயில்தனை, நெஞ்சமும் மறக்கவில்லை.. (நீலமயில்தனை..)
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை..
(நீலமயில்தனை..)(நேசமுடன்..)
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
அஆ,ஆ,அஆ,அஅ.. அஅஅஆஅஅஅ, அஅஆ.. (கோலக்குமரன்,..)
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்..
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

நட்பு அது மாற்றமின்றித் தொடருமே..

பாடல்:
தேவதை வம்சம் நீயோ..?

படம்:
சிநேகிதியே!

இசை:
வித்யாசாகர்

பாடியவர்:
சித்ரா, சுஜாதா

எழுதியவர்:
பா விஜய்

முழுவரிகள்:
[தையாரார தாரா, தை..யாரார தாரா,
தையாரார தாரா, தை..யாரார தாரா,
தையயாரார தாரா, தை..யாரார தாரா,
தையாரார தாரா, தை..யாரார தாரா,]

தேவதை வம்சம் நீயோ..?
தேன்நிலா அம்சம் நீயோ..?
பூமிக்கு ஊர்வலம் வந்த, வானவில் நீயோ..!
பூக்களின் வாசம் நீயோ..?
பூங்குயில் பாஷை நீயோ..?
சூரியன் போனதும் அங்கே, வருவதும் நீயோ..!
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )

நட்சத்திரப் புள்ளி, வானமெங்கும் வைத்து,
நிலவுன்னை கோலம்போட அழைத்திடும்..(தையாரார தாரா,)
நீயிருக்குத் இடம், வேடந்தாங்கல் என்று,
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்..

பெண்பூவே நீயும் ஆட,
முகில்கள் ஊஞ்சல் போடும்..
உலாவும் தென்றல் வந்து,
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்..

பகலினில் முழுவதும் வெயிலினிலே,
உனைச்சுட்டு வருத்திய வானம் அது..
இரவினில் முழுவதும் அதையெண்ணியே,
பனித்துளி சிந்தியே அழுகிறது..
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )
(தேவதை வம்சம்..)

வானின் திசைமாறும், பாதைகளும் மாறும்,
நட்பு அது மாற்றமின்றித் தொடருமே.. (தையாரார தாரா,)
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்,
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே..

உன்பாதம் போகும் பாதை,
மண்ணுக்கு சந்தோஷங்கள்..
உன்னோடு ஓர் - ஓர் நிமிஷம்,
உயிருக்கு ஆனந்தங்கள்..

பூக்கள் எல்லாம் உன்னைத்தொட தவமிருக்கும்,
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்..
வானவில்லும் வந்துனக்கு குடைபிடிக்கும்,
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்..
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )
(தேவதை வம்சம்..)
(தையாரார தாரா,)(தையயாரார தாரா, )

கூடு இன்று குயிலைத் தானே தேடுது...

பாடல்:
நான் பாடும் மௌனராகம்..

படம்:
இதயக்கோயில்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
நான் பாடும் மௌன ராகம்..
என் காதல் ராணி இன்னும்..

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா...?
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா...?
கண்ணீ­ரில் உன்னைத் தேடுகின்றேன்;
என்னோடு நானே பாடுகின்றேன்; (நான் பாடும்..)

உன்னைக் கண்டுத் தென்றலும் நின்று போனதுண்டு!
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு!
ஏன் தேவி இன்றுநீ என்னைக் கொல்கிறாய்?
முள்மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்?
உன்னைத் தேடித் தேடியே, எந்தன் ஆவி போனது;
கூடுதானே இங்கு பாடுது!
கூடு இன்று குயிலைத் தானே தேடுது... (நான் பாடும்..)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்;
வாங்கி வந்த பின்புதான், சாபம் என்று கண்டேன்!
என் சாபம் தீரவே நீயும் இல்லையே..
என் சோகம் பாடவே ராகம் இல்லையே..
பூவும் வீழ்ந்து போனது, காம்பு என்ன வாழ்வது;
காலம் என்னைக் கேள்வி கேட்குது!
கேள்வி இன்று கேலியாகிப் போனது... (நான் பாடும்..)
(கண்ணீ­ரில்..) (நான் பாடும்..)