பாடல்:
வெயிலோடு விளையாடி
படம்:
வெயில்
இசை:
ஜீ வீ பிரகாஷ் குமார்
பாடியவர்:
திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்
எழுதியவர்:
நா முத்துக்குமார்
முழுவரிகள்:
இய்யாஹி யாஹி யாஹி யாஹி,
யதாஹி யாஹி யாஹி யாஹி
யதாஹி யதாஹி யாஹி, ஹே..
தையாரி.. தையாரி.. ஹே..
யாஹி யாஹி யாஹி யாரோ,
தாராரோ.. ஹே, தாரா ரா ரா ரோ..
வெயிலோடு விளையாடி,
வெயிலோடு உறவாடி,
வெயிலோடு மல்லுக்கட்டி,
ஆட்டம் போட்டோமே!
நண்டூரு நரி ஊரு,
கருவேலங் காட்டோரம்,
தட்டானைச் சுத்திச் சுத்தி,
வட்டம் போட்டோமே!
பசி வந்தா குருவி முட்டை;
தண்ணிக்கு தேவன் குட்டை;
பறிப்போமே சோளத்தட்டை;
புழுதி தான் நம்மச் சட்டை!
(புழுதி தான்..)அஆ... (வெயிலோடு..)
ஏ... ஓ...
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்..
வத்திக்குச்சி அடுக்கிக் கணக்குப் பாடம் படிச்சோம்!
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்..
தண்டவாளம் மேல காசை வச்சுத் தொலச்சோம்!
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி, அப்பாவோட வேட்டியிலே,
கண்ணாடி லென்சை வச்சு, சினிமா காமிச்சோம்!
அண்ணாச்சிக் கடையில தான், எண்ணெயில தீக்குளிச்ச,
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,
ஓட்டம் போட்டுத் திரிஞ்சோம்!
வெயிலத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்?? (வெயிலோடு..)
ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே! ஹேஹே!
ஹேஹே ஹேஹே ஹெஹஹெ ஹேஹே,
ஹேஹே ஹேஹே ஹேஹேஹே.. (2 முறை)
ஏலேலேலே லேலேலே.. (3 முறை)
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்..
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்!
காந்தத்தை மண்ணுல தேய்ச்சுப் பேயை ஆட்டுனோம்..
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்!
ஊமத்தம்பூவை மாத்தி கல்யாணம்தான் கட்டிக்குவோம்;
கழுதைமேல ஊர்வலமா ஊரைச் சுத்துனோம்!
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழைப் பெய்யும்;
அப்ப நாங்க மின்னலுல போட்டோப் புடிச்சோம்!
தொப்புள்கொடியைப் போலத்தான்,
இந்த ஊரை உணர்ந்தோம்..
வெயிலைத் தவிர வாழ்க்கையில,
வேற என்ன அறிஞ்சோம்!! (வெயிலோடு..)
(நண்டூரு..) (பசி வந்தா..)
(வெயிலோடு..) (வெயிலோடு..)
பரோட்டாக்கு, பாதிச் சொத்தை நாம அழிச்சோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment