கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,

பாடல்:
நான் ஒரு முட்டாளுங்க..

படம்:
சகோதரி

இசை:
சுதர்சனம் ஆர்

பாடியவர்:
சந்திரபாபு ஜே பி

எழுதியவர்:
கவியரசு கண்ணதாசன்

முழுவரிகள்:
நான் ஒரு முட்டாளுங்க..
நான் ஒரு முட்டாளுங்க..

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

ஏற்கனவே சொன்னவங்க, ஏமாளி ஆனாங்க,
எல்லாந் தெரிஞ்சிருந்தும், புத்தி சொல்ல வந்தேங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய, 'கயிதே'னு சொன்னாங்க,
எஏஎஅ, அஅஅ அஅஅ அ, ஏ.. ஏ.. ஏ.. கயிதே, டாய்!

கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய, 'கயிதே'னு சொன்னாங்க,
முன்னால நின்னாக்கா, மூஞ்சிமேல அடிச்சாங்க..
பேசாதே இன்னாங்க, பொரட்டி - பொரட்டி எடுத்தாங்க,
பீஸ் பீஸா, கீச்சாங்க, பேஜாரா பூட்டுதுங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

கால் பாத்து நடந்தது, கண்ஜாடை காட்டுது,
பால்கொண்டு போறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது..
மேல்நாட்டு பாணியிலே, வேலையெல்லாம் நடக்குது,
ஏன்-னு கேட்டாக்கா, எட்டி எட்டி ஒதைக்குது,
நான் ஒரு முட்டாளுங்க..

நாணமுன்னு, வெக்கமுன்னு, நாலுவகை சொன்னாங்க,
நாலும்கெட்ட கூட்டமொன்னு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க..
ஆனவரை சொன்னேங்க, அடிக்கத்தானே வந்தாங்க,
அத்தனையும் சொன்ன என்னை, இளிச்சவாயன் இன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க..

நான் ஒரு முட்டாளுங்க..
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க,
நான் ஒரு முட்டாளுங்க.. முட்டாளுங்க.. முட்டாளுங்க..

No comments: