நிலா தமிழறிந்தால்,

பாடல்:
மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?

படம்:
லவ் பேர்ட்ஸ்

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
ஹரிஹரன், சித்ரா

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)


மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..


மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?


நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..


மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

No comments: