பொன்னில் வடித்த சிலையே!

பாடல்:
மணியே மணிக்குயிலே,

படம்:
நாடோடித் தென்றல்

இசை:
இளையராஜா

பாடியவர்:
இளையராஜா, மனோ, எஸ் ஜானகி

எழுதியவர்:
இளையராஜா

முழுவரிகள்:
இளையராஜா:
மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் மணியழகே!

ஆண்:
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
ஆண்;
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!
ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..யெஎ எஎஏ!
பெண்:
என்ன இனிக்கும் நிலையே!
இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..யெஎ எஎஏ!

ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு,
காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!
பெண்:
பெண்ணிவளை ஆதரித்து,
பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
ஆண்:
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
பெண்:
தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
ஆண்:
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஆ.... அஅ ஆஅஅ அஆஅ அஆஆ..
ஆஆ, அஆஆஅ ஆ..
ஆஆஅ ஆஆஅ, ஆஆஅ ஆஆஅ, ஆ..

கண்ணிமைகளை வருத்தி,
கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..இஇ இஇஈ!
ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி,
கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..இஇ இஇஈ!

பெண்:
கோடிமணி ஓசைநெஞ்சில்,
கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்..
ஆண்:
சூடமலர் மாலை கொண்டு,
தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்..

பெண்:
அந்தி வரும் நேரமம்மா,
ஆசைவிளக்கேற்றுதம்மா,
ஆண்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;
துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
ஆண்:
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
பெண்:
ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,
ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?

No comments: