கூடு இன்று குயிலைத் தானே தேடுது...

பாடல்:
நான் பாடும் மௌனராகம்..

படம்:
இதயக்கோயில்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
நான் பாடும் மௌன ராகம்..
என் காதல் ராணி இன்னும்..

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா...?
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா...?
கண்ணீ­ரில் உன்னைத் தேடுகின்றேன்;
என்னோடு நானே பாடுகின்றேன்; (நான் பாடும்..)

உன்னைக் கண்டுத் தென்றலும் நின்று போனதுண்டு!
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு!
ஏன் தேவி இன்றுநீ என்னைக் கொல்கிறாய்?
முள்மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்?
உன்னைத் தேடித் தேடியே, எந்தன் ஆவி போனது;
கூடுதானே இங்கு பாடுது!
கூடு இன்று குயிலைத் தானே தேடுது... (நான் பாடும்..)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்;
வாங்கி வந்த பின்புதான், சாபம் என்று கண்டேன்!
என் சாபம் தீரவே நீயும் இல்லையே..
என் சோகம் பாடவே ராகம் இல்லையே..
பூவும் வீழ்ந்து போனது, காம்பு என்ன வாழ்வது;
காலம் என்னைக் கேள்வி கேட்குது!
கேள்வி இன்று கேலியாகிப் போனது... (நான் பாடும்..)
(கண்ணீ­ரில்..) (நான் பாடும்..)

No comments: