கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?

பாடல்:
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!

படம்:
டிஷ்யூம்

இசை:
விஜய் ஆண்டனி

பாடியவர்:
ஜெயதேவ், ராஜலக்ஷ்மி

எழுதியவர்:
தெ. தெ, தெ! (தெரியவில்லை. தெரிந்தவர், தெரிவிக்கவும்!)
[நா முத்துக்குமாரா இருக்கலாம்..]

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

ஹேய்...
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்! - பெண்ணே,
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்!

கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய்! - முதுகில்,
கட்டெறும்புப் போலே ஊர்கிறாய்!

காதல் தானே! இது காதல் தானே!

உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை?
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்!
இன்னும் பூமுகம் மறக்கவில்லை.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்...
விண்ணைத் துடைக்கின்ற முகிலை,
வெள்ளி நிலவை, மஞ்சள் நட்சத்திரத்தை,
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து,
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்!

இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்து முடித்தேன்;
உள்ளம் காதலிக்கும் உனக்குமட்டும், இன்னும்
சொல்லவில்லையே, இல்லையே!

லட்சம் பல லட்சம் என்று, தாய் மொழியில் சொல்லிருக்க,
ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி, பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியால் களைப்பாளே அதுபோலே...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

ஹேய்,
சாய் சாய் பாய் பாய், சிப்பிலிப்பு சாய் பாய்..
காய் வாய் பாய் சாய், லுப்பாய் சாய் பே க்கு..
துப்பு சுப்பாய், துப்பலாய், சி ல பாய் துலுப்பு,
சக்குத் தக்காய், சலோ, வெக்கேன்டா..

சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்,
சீனிச் சிரிப்பும், என்னைச் சீரழிக்குதே;
விறுவிறுவென வளரும் பழம்,
எந்தன் விரதங்களை வெல்லுதே!

உன்னைக் கரம்பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிட சொல்லுதே;
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து,
என்னைக் குத்திக் குத்தியே கொல்லுதே!

காதலெந்தன் வீதி வழி, கையை வீசி வந்த பின்னும்,
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே?
ஃபெப்ரவரி மாதத்துக்கு, நாளு ஒண்ணுக் கூடி வர,
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோல...

நெஞ்சாங்கூட்டில்.. நெஞ்சாங்கூட்டில்.. (நெஞ்சாங்கூட்டில்..)

(காதல் தானே!..) (நெஞ்சாங்கூட்டில்..) (நெஞ்சாங்கூட்டில்..)

No comments: