அவன் அருள் மழையினில்..

பாடல்:
முருகனை நினை மனமே....

இசைத்தொகுப்பு:
இளையராஜாவின் கீதாஞ்சலி [பக்திப் பாடல்கள்]

இசை:
இளையராஜா

பாடியவர்:
இளையராஜா

எழுதியவர்:
?? [தெரிந்தவர் தெரிவிக்கவும்-இளையராஜாவாவே இருக்குமோ?]
புதுப்பிப்பு {பிப்ரவரி 9,2008}:
இளையராஜா தான்!
[நடமாடும் திரையகராதி - சொந்தம் ஒருத்தர் கூறியது;
வலையிலும் ராகவன்-னு ஒருத்தர் எழுதியிருக்கார்]

முழுவரிகள்:
முருகனை நினை மனமே..
நலங்கள், பெருகிடும் தினம் தினமே.. (முருகனை..)

உருகிடும் மறுகணமே,
உருகிடும் மறுகணமே,
நெருங்கி வருவது அவன் குணமே.. (முருகனை..)

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்.. ஆ... (ஒவ்வொரு..)
ஒவ்வொரு செயலிலும் பெருமையை கொடுப்பவன்..
உடலுக்கு உயிர் எனில் உயிருக்கு ஒளி அவன்.. (உடலுக்கு..)
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும், (முருகனை..)

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்.. ஆ.. (அழகனின்..)
அவன் விழியசைவினில் கலைகளும் மலர்ந்திடும்..
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்.. (அவன்..)
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட.. (முருகனை..)

உருகிடும் மறுகணமே,
நெருங்கி வருவது அவன் குணமே.. (முருகனை..)