எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!

பாடல்:
எனக்கென ஏற்கனவே,

படம்:
பார்த்தேன்! ரசித்தேன்!

இசை:
பரத்வாஜ்

பாடியவர்:
உன்னி் கிருஷ்ணன், ஹரிணி

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

எனக்கென ஏற்கனவே, பிறந்தவள் இவளோ..?
இதயத்தைக் கயிறு கட்டி, இழுத்தவள் இவளோ..?
ஒளி சிந்தும் இரு கண்கள்;
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்;
என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே...!
அ அஅ ஆஅ அஅஆ..

என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே..
அது என்னென்று அறியேனடி.. ( என்னுள்ளே,.. )
ஓரப் பார்வை பார்க்கும் போதே, உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு, பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை, குடிக்கும் உரிமை, உனக்கே.. உனக்கே..


உயிரே, உயிரே, உடம்பில் சிறந்தது,
எதுவென்று தவித்திருந்தேன்!
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்!
கண்ணே உன்னைக் காட்டியதால், என் கண்ணே சிறந்ததடி!
உன் கண்கள் கண்டதும், இன்னொரு கிரகம், கண்முன் பிறந்ததடி!

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது,
அஅஆஅ ஆஅ,, (காதல் என்ற..)
அது காலத்தைக் கட்டுகின்றது;
என் மனம் என்னும், கோப்பையில் இன்று,
உன்னுயிர் நிறைகின்றது!
(என் மனம்..)


எனக்கென ஏற்கனவே, பிறந்தவள் இவளோ..?
இதயத்தைக் கயிறு கட்டி, இழுத்தவள் இவளோ..?
என்னுள்ளே, என்னுள்ளே, ஏதேதோ செய்கிறதே..
அது என்னென்று அறியேனடி..


மார்புக்குத் திரையிட்டு மறைக்கும் பெண்ணே,
மனசையும் மறைக்காதே!
என் வயதையும் வதைக்காதே!
புல்வெளி கூட, பனித்துளியென்னும் வார்த்தை பேசுமடி!
என் புன்னகைராணி, ஒரு மொழி சொன்னால், காதல் வாழுமடி!

வார்த்தை என்னை கைவிடும் போது, மெளனம் பேசுகிறேன்..
என் கண்ணீர் வீசுகிறேன்..
எல்லா மொழிக்கும், கண்ணீர் புரியும்!
உனக்கேன் புரியவில்லை..? (எல்லா மொழிக்கும்,..)


(எனக்கென..) (ஒளி சிந்தும்..)

(என்னுள்ளே,..) (என்னுள்ளே,..) (ஓரப்பார்வை..)

No comments: