வானம் உங்கள் கைகளில் உண்டு!

பாடல்:
உன்னால் முடியும், தம்பி! தம்பி!

படம்:
உன்னால் முடியும் தம்பி

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
புலமைப்பித்தன்

முழுவரிகள்:
உன்னால் முடியும், தம்பி! தம்பி!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!

உன்னால் முடியும், தம்பி! தம்பி! - அட!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தோளை உயர்த்து! தூங்கிவிழும் நாட்டை எழுப்பு! - உன் (தோளை..)
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்! (உன்னால்..)

நாளைய நாட்டின் தலைவனும் நீயே..
நம்பிக்கைக் கொண்டு வருவாயே!
உனக்கெனவோர் சரித்திரமே, எழுதும் காலம் உண்டு!

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும், தம்பி! தம்பி! - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்,
சாராய கங்கை காயாதடா!
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்,
காசுள்ள பக்கம் பாயாதடா!

குடிச்சவன் போதையில் நிப்பான்;
குடும்பத்தை வீதியில் வைப்பான்;
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா!

கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுது போடா, (கள்ளுக்கடை..)
மண்ணோடு போகாமல், நம் நாடு திருந்தச் செய்யோணும், (உன்னால்..)

கல்லூரி, பள்ளி இல்லாத ஊரை,
கையோடு இன்றே தீமூட்டுவோம்!
கல்லாத பேர்கள் இல்லாத நாடு,
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்!

இருக்கிற கோவிலையெல்லாம்,
படிக்கிற பள்ளிகள் செய்வோம்!
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்!

வானம் உங்கள் கைகளில் உண்டு!
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு! (வானம்..)
நான் என்று எண்ணாமல், நாம் என்று உறவு கொள்ளணும்,

மா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக(உன்னால்..)

தோளை உயர்த்து! தூங்கிவிழும் நாட்டை எழுப்பு! - உன் (தோளை..)
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்! (உன்னால்..)

No comments: