காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,

பாடல்:
செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,

படம்:
வண்டிச்சோலை சின்னராசு

இசை:
ஏ ஆர் ரஹ்மான்

பாடியவர்:
சாகுல் ஹமீது

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..
நெசவு செய்யும் திருநாட்டில்,
நீச்சல் உடையில் அலையிறியே..
கணவன் மட்டும் காணும் அழகை,
கடைகள் போட்டுக் காட்டுறியே.. (செந்தமிழ்நாட்டுத்..)

எலந்தைக காட்டில் பொறந்தவ தானே,
லண்டன் மாடல் நடையெதுக்கு?
காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது,
காத்துவாங்கும் உடையெதுக்கு?
உடம்புவேர்க்கும் உஷ்ணநாட்டில்,
உரசிப் பேசும் ஸ்டைலெதுக்கு?
டக்கர் குங்குமம் மணக்கும்நாட்டில்,
ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே..
நெசவு செய்யும் திருநாட்டில்,
நீச்சல் உடையில் அலையிறியே..

கற்பு என்பது பிற்போக்கு இல்ல,
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்!
காற்றில்மிதக்கும் கார்குழல்பின்னி,
கனகபூக்கள் அணிஞ்சிக்கணும்!
பழமை வேறு, பழசு வேறு,
வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!
புரட்சியெங்கே, மலர்ச்சி எங்கே,
புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்! (செந்தமிழ்நாட்டுத்..)

செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே,
சேலை உடுத்தத் தயங்குறியே.. (4 முறை)