நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..

பாடல்:
நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்

படம்:
மறுபடியும்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும், பல்லாண்டு, என் வார்த்தைகள்..
இளவேனில், உன் வாசல் வந்தாடும்..
இளந்தென்றல், உன் மீது பண்பாடும்.. (இளவேனில்..)
(நலம் வாழ..) ஓ..

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்;
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்..
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்;
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்..
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு,
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு,
இதில் என்ன பாவம், எதற்கிந்த சோகம், கிளியே.. (நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது,
மறைவதும் பின்பு உதிப்பதும் மர‌பானது..
கடல்களில் உருவாகும் அலையானது,
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது..
நிலவினை நம்பி, இரவுகள் இல்லை..
விளக்குகள் காட்டும், வெளிச்சத்தின் எல்லை..
ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான், இறைவன்..

நலம் வாழ, என்னாளும், என் வாழ்த்துக்கள்..
தமிழ் கூறும், பல்லாண்டு, என் வார்த்தைகள்..
இளவேனில், உன் வாசல் வந்தாடும்..
இளந்தென்றல், உன் மீது பண்பாடும்.. (இளவேனில்..)
(நலம் வாழ..)

No comments: