வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!

பாடல்:
தாஜ்மகால் தேவையில்லை,

படம்:
அமராவதி

இசை:
பாலபாரதி

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

எழுதியவர்:
தெரியவில்லை, தெரிந்தவர் தெரிவிக்கவும்..

முழுவரிகள்:
(பெண் குரல் வரிகள் தடிப்பில்)

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..
இந்த பந்தம், இன்று வந்ததோ?
ஏழுஜென்மம், கண்டுவந்ததோ?
உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

பூலோகம் என்பது, பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ, பூலோகம் தாண்டி வாழலாம்..!
ஆகாயம் என்பது, இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே, ஆகாயம் தாண்டி வாழலாம்..!

கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சுக் காதலே!
கறைமாற்றி நாமும் மெல்ல, கரையேற வேண்டுமே!
நாளை வரும், காலம் நம்மை, கொண்டாடுமே...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

சில்வண்டு என்பது, சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால், செடி என்ன கேள்வி கேட்குமா?
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல் கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா?

வாழாத காதல் ஜோடி, இம்மண்ணில் கோடியே!
வாழாத பேர்க்கும் சேர்த்து, வாழ்வோமே தோழியே!
வானும் மண்ணும், பாடல் சொல்லும், நம்பேரிலே...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..
இந்த பந்தம், இன்று வந்ததோ?
ஏழுஜென்மம், கண்டுவந்ததோ?
உலகம் முடிந்தும், தொடரும் உறவிதுவோ...

தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே..

No comments: