அடுத்த அடியென்ன எடுப்பது நான்;

பாடல்:
உன் பார்வையில் ஒராயிரம்,

படம்:
அம்மன் கோவில் கிழக்காலே..

இசை:
இளையராஜா

பாடியவர்:
யேசுதாஸ் [& சித்ரா?]
[இணையத்துல போட்டிருக்காங்க, ஆனா பாடல்-ல பெண்குரல் இல்ல, பெண்குரல் பாடல் எனக்கு கிடைக்கல...]

எழுதியவர்:
வைரமுத்து

முழுவரிகள்:
உன் பார்வையில் ஓராயிரம்,
உன் பார்வையில் ஓராயிரம்,
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே! (உன் பார்வையில்..)
நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்,
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்;
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்,
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்;
இருக்கும் வரைக்கும், எடுத்துக்கொடுக்கும்,, (இருக்கும்..)
மனதை மயிலிடம் இழந்தேனே;
மயங்கி தினம் தினம் விழுந்தேனே!
மறந்து, இருந்து, பறந்து, தினம் மகிழ,, (உன் பார்வையில்..)

நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

அணைத்து நனைந்தது தலையணைதான்,
அடுத்த அடியென்ன எடுப்பது நான்;
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்,
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்;
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்,, (நினைக்க..)
மறைத்த முகத்திரை திறப்பாயோ;
திறந்து அகச்சிறை இருப்பாயோ!
இருந்து, விருந்து, இரண்டு, மனம் இணைய,, (உன் பார்வையில்..)

நிதமும் உன்னை, நினைக்கிறேன்,
நினைவினாலே, அணைக்கிறேன்,, (உன் பார்வையில்..)

No comments: